- ராஜ்ய சபா
- புது தில்லி
- மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்
- ஜெய்ஷங்கர்
- திரிணமுல்
- டெரிக் ஓ'பிரையன்
- தின மலர்
புதுடெல்லி: ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், திரிணாமுல் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்பட 10 பேரின் மாநிலங்களவை எம்பி பதவிகளுக்கு ஜூலை 24ல் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் மாநிலங்களவை எம்பி பதவி அடுத்த மாதம் முடிவுக்கு வருகிறது. இதே போல் 9 எம்பிக்களின் பதவி ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 18க்குள் முடிவுக்கு வருகிறது. கோவா மாநிலத்தில் தேர்வு செய்யப்பட்ட பா.ஜ உறுப்பினர் வினய் டி டெண்டுல்கர், குஜராத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஜெய்சங்கர், ஜகல்சிங் லோகந்த்வாலா, தினேஷ்சந்திரா அனவாடியா, மேற்குவங்கத்தில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் தேர்வு செய்யப்பட்ட டெரிக் ஓ பிரையன், டோலா சென், சுஷ்மிதா தேவ், சாந்தா சேத்திரி, சுகேந்து சேகர் ராய், காங்கிரஸ் சார்பில் தேர்வு செய்யப்பட்ட பிரதீப் பட்டாச்சார்யா ஆகியோர் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. இந்த காலி இடங்களை நிரப்ப ஜூலை 24ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
The post 10 மாநிலங்களவை எம்பி பதவிகளுக்கு ஜூலை 24ல் தேர்தல் appeared first on Dinakaran.